திரு. கந்தையா கணபதிப்பிள்ளை

மலர்வு

15.12.1924

உதிர்வு

26.11.2020

யாழ் – ஹட்டன்

யாழ் அச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும், ஹட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் (இளைப்பாறிய யாழ் பிரதம தபாலக தபால் அதிபர்) 26.11.2020 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்;ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்

அன்னார் காலஞ்சென்ற கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம்- இலட்சுமியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்

நாகம்மா (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்

ரோகினி தேவி (அமெரிக்கா), சியாமளா (ஓய்வு நிலை கணித ஆசிரியர்), சோமாஸ்கந்த (கனடா), நாகேஸ்வரி (கனடா), அருண்மொழி (கனடா), மோகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்

முத்துவேல், சிவகுமார் (Retd.T.O.U.C Hatton), விஜியகலா, சுரேஸ், கிருஷ்ணானந்தவேல், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்ற சின்னம்மா, பொன்னம்மா, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற பண்டிதர் இராமசாமி, முருகேசு வேலுப்பிள்ளை, மயில்வாகனம், சரவணமுத்து, கந்தையா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்

சுஜா, கஜந்தன், தினேஷன், துவாரகா, நிரூபன், சியானி, பிரசானி, ஜீவிதன், சதுர்ஷன், மிதுர்ஷா, யதுர்ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 27.11.2020 வெள்ளிக்கிழமையன்று இல 2/44 சோம்வெ இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 4.30 மணியளவில் கொட்டசாலை கொமர்சல் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தகவல்:- சிவகுமார் (மருமகன்) ஹட்டன்

தொலைபேசி: 0773040876,

0754942669

https://vimeo.com/484705750

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro