திரு. நடராஜா அருள்நாதன்

மலர்வு

21.03.1959

உதிர்வு

22.11.2020

யாழ்ப்பணம் – இலங்கை

யாழ்ப்பாணம், நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் இல.16, ராணி வீதி, நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருள்நாதன் அவர்கள் 21.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா – தர்மேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சந்தானம் – யோகமலர் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

சகுந்தலாதேவியின் அன்புக் கணவரும்,

கவின்பிரகாஷ் (பிரான்ஸ்), அருச்சுன் (உரிமையாளர், அபிகிசாந் கட்டடப்பொருள் விற்பனை நிலையம்), சுகனியா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சமந்தமதி (பிரான்ஸ்), சத்தியா, திலக் சுபராஜ், (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருந்தவமலர் (உரிமையாளர், சிறி சுகந்தி கட்டடப்பொருள் விற்பனை நிலையம்), அருந்தவநாயகி (பிரான்ஸ்), அருந்தவராணி (சுவிஸ்), ரஞ்சினிதேவி (கனடா), பாமினி (சுவிஸ்), காலஞ்சென்ற பாலச்சந்திரன் (சுவிஸ்), பாலேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கிஷான், கியாஷ், கிர்த்திக், கியான், அக்ஷயா, அஹானா, அபிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் சபிண்டீகரணக் கிரியை நேற்று (21.12.2020) திங்கட்கிழமை கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் தீர்த்தக்கரையில் நடைபெற்றது.

வீட்டுக்கிருத்திய நிகழ்வும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (22.12.2020) செவ்வாயக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுக்கும் பல்வேறு வகைகளிலும் இறுதி நிகழ்வில் உதவி புரிந்தவர்களுக்கும் தொலைபேசி மூலம் துயர் பகிர்ந்தவர்களுக்கும் எமது குடும்பத்தாரின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
076 064 3650

16, ராணி வீதி,
நாயன்மார்கட்டு,
நல்லூர், யாழ்ப்பாணம்.

https://vimeo.com/493997553

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro