வவுனியா – கொழும்பு
(பிரபல வர்த்தகர்)
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கதிர்காமராஜா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கதிர்காமு சுப்பிரமணியம், கனகாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகலாதன் (கீர்த்தன்), ஹம்பரீசன் (பிறம்மா), அம்சவிர்தன் (வர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.06.2021 வியாழக்கிழமை அன்று மாலை 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாலை 3.00 மணியளவில் வவுனியா வாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3.30 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஹம்பரீசன் (பிறம்மா – மகன்) – 0717849839
அம்சவிர்தன் (வர்மன் – மகன்) – 0703808238
இலக்கியவரதன் – 0779986170
சதாநந்தன் (நெவில் – சகலன்) – 00447449010357