திரு. மூக்கையா சண்முகநாதன்

மலர்வு

06.04.1970

உதிர்வு

29.06.2021

வெள்ளாந்தெரு – யாழ்ப்பாணம்

வெள்ளாந்தெருவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மூக்கையா சண்முகநாதன் அவர்கள் நேற்று (29.06.2021) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மூக்கையா அன்னம்மா தம்பதியரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னலட்சுமி தம்பதியரின் மருமகனும்,

ரேவதியின் (சிவா) அன்புக் கணவரும்,

யோஜீவன், யேஜீவன், குகஜீவன் (சென்ஜோன்ஸ் பழைய மாணவர்கள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமதி லிங்கமூர்த்தி, திருமதி சிவஞானசுந்தரம், குலேந்திரன் (வீடியோ விமல்), சந்திரன் (கனடா), திருமதி நித்தியானந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

நாகேஸ்வரி, அமரர் சந்திராதேவி, மகேஸ்வரி, யோகேஸ்வரன், யோகேஸ்வரி, ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 01.07.2021 வியாழக்கிழமை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைதியான முறையில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
இந்திரன் – 0777274369
மனைவி – 0772087765

முகவரி:
9/1, வெள்ளவாந்தெரு,
யாழ்ப்பாணம்.

https://vimeo.com/569304859

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro