மட்டக்களப்பு – மட்டக்களப்பு
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் ஞானமணி மனோகரன் அவர்கள் 14.07.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதன் – எலிசபேத்
தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தசாமி தம்பதியரின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மேரிஆஞ்சலா ஜீவரட்ணம், மேரிதிரேஸ் மற்றும் ஜெயரட்ணநாதன், ஜெயபத்மநாதன், மேசிராஜேஸ்வரி ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானஜோதி மற்றும் மகேந்திரன், குலேந்திரன், நகுலேந்திரன், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சாந்தகுமாரி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நிவோஷலா (மகள்)
தொடர்புகளுக்கு :
இந்திரா (மருமகள்) – 0777079545