நவாலி – வவுனியா
நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் நேற்று (28.08.2021) சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், ஜேசுதாஸ் – தேவமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்பே எங்கள் குடும்பத்தின் விளக்கே
எங்கள் குடும்பத்திற்கு ஒளியாய் இருந்தாய்
இன்று இருளாக்கிவிட்டு எங்கே சென்றாய்
அன்புக்கு இலக்கணமாய்
எங்கள் வாழ்க்கைக்கு துணையாய் வந்தாய்
ஆனால் இன்று எங்களை தவிக்க விட்டு விட்டு
நீ எங்கே சென்றாய்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மனோகிதன் (மகன்) – 0017735411573