திரு. செல்லையா கிருஸ்ணபிள்ளை (சுதாகர்)

மலர்வு

13.12.1950

உதிர்வு

31.08.2021

யாழ்ப்பாணம் – திருகோணமலை

(உரிமையாளர் – நிமல் ஏஜென்சி)

யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லதா, உதயலதா (கனடா), பிரதீபா (லண்டன்), சோபா, நிமலவர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்பிரமணியம், கிருஸ்ணகுமார் (கனடா), கேதீஸ்வரன் (லண்டன்), சிவகுமாரன் (கனடா), தர்ஷனி (இ.மி.ச. திருகோணமலை) ஆகியோரின் மாமனாரும்,

நடராசா, தங்கம்மா, இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, நமசிவாயம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷந்தா, காலஞ்சென்ற லக்ஷனா, விதுர்சனா (கனடா), சதுர்சனா (கனடா), கனிஷன் (கனடா), வருணிகா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01.09.2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்
.

தொடர்புகளுக்கு :
உதயா (மகள்) – 0019055018699
கிருஸ்ணகுமார் (மருமகன்) – 0016478319713
தீபா (மகள்) – 00447572173350
நிமல் (மகன்) – 077 691 1590

வீட்டுமுகவரி :
இல. 37, 1ம் ஒழுங்கை,
லிங்கநகர், திருகோணமலை.

Share This Post

Select your currency
EUR Euro