நவாலி – கனடா
நவாலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் கடந்த (03.09.2021) வெள்ளிக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (சின்னம்மான்) – தில்லைமுத்து தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா – பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
சிவலிங்கத்தின் அன்பு மனைவியும்,
சுகிதரன், சுமதி, சிவகௌரி, சைலா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இன்பராணி, குகனகாந்தன், கிருபன், தயாளன், பானுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜா, ராஜேஸ்வரி, சந்திரா, இந்திரா, ரவீந்திரன், பாலகிருஷ்ணன், சாந்தினி, வசந்தினி, சங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கஜானா, மனோஜன், லிதுஜன், ஜெனா, சாரங்கா, நிகிதா, டிசான், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆரன், ஆபரன், வர்சினி, இளம்மருகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று (04.09.2021) சனிக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சுதன் (மகன்) – 0014168206253