மல்லாகம் – மட்டக்களப்பு
யாழ்ப்பாணம் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாசியர் இராமச்சந்திரன் அவர்கள் 23.10.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாசியர் – பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – யோகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானேஸ்வரி, சந்திரகாந்தா, சந்திரவதனா, சந்திரகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான அருள்வேல், நவமணி, ஐஸ்வரியா மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகவேல், காலஞ்சென்ற யோகேஸ்வரன், சுரேந்திரன், அருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகாலிங்கம் மற்றும் பரமலிங்கம், சாந்தலிங்கம், பத்மாவதி, வசந்திமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புருஷோத்மன், மதுஷன், திலக் ஷனா, அக் ஷனா, அக் ஷயா, இனியவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (28.10.2021) வியாழக்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பிரேமா (மகள்) 076 757 5855, 065 222 2734