வசாவிளான் – ஒட்டகப்புலம்
(இளைப்பாறிய கணித பாட ஆசிரியை வசாவிளான் மத்திய கல்லூரி)
யாழ். வசாவிளான் ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஞானவதனம் அக்குறூஸ் அவர்கள் 05.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று யாழில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜோசப் செல்லம்மா தம்பதிகளின் புதல்வியும்,
ஜோசப் சந்திரசேகரம் அவர்களின் சகோதரியும்,
மரியம்மா சந்திரசேகரம் (கனடா) அவர்களின் மைத்துனியும்,
ஸ்டீபன் (ஐக்கிய அமெரிக்கா), சந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), அருள் (கனடா), மதி (கனடா), ஆனந்தி (ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
அனுஷா, ரெஜினி, அனிற்ரா, பிறேமா, யூலியஸ், செல்ரன் ஆகியோரின் மாமியும்,
பிரமிகா, பிரஜித், அஞ்சலி, ஷாமிலி, சியாம், நிலா, நினா, கவி, ரிஷி, நேசா, காவ்யா, நேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் உடல் பிரதான வீதியில் அமைந்துள்ள ‘வையிற் கவுஸ் ‘அந்நிய கால சேவை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த விரும்பியவர்கள் 08.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலி செலுத்த முடியும்.
அன்னாரின் திருவுடல் 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளாவில் இல 243, ஆஸ்ப்பத்திரி வீதியில் அவர் சில காலம் வாழ்ந்த அமரர் அலோசியஸ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11.04.2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளாவில் இல்லத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆலயத்தில் மு.ப 09: 00 மணிமுதல் மு.ப 10: 00 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டும், அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
(பிரயாண வசதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது).
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மரியம்மா சந்திரசேகரம் (மைத்துனி) – 0016132162246
மரியம்மா சந்திரசேகரம் (மைத்துனி) – 0779633037