திரு. கணபதிப்பிள்ளை இரவீந்திரன்

மலர்வு

08.03.1939

உதிர்வு

03.05.2022

கொழும்பு – மட்டக்களப்பு

(ஓய்வுநிலை இலங்கை வங்கி முகாமையாளர், சர்வதேச பிரிவு, கொழும்பு)

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஸ்ரீசிவானந்த வீதியை சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை இரவீந்திரன் அவர்கள் 03.05.2022 அன்று மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

தொண்டைமானாற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைராஜா – இரத்தினாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இ.துரைரெத்தினவதியின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற நவசோதி, கனகேஸ்வரன், வசந்தகுமாரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

ஜில், ரூபராணி, றம்லின் மற்றும் காலஞ்சென்ற சுகிர்தவதி, லலிதவதி, மானவதி, ரூபவதி, சண்முகபாலன், சண்முகவரதன், கிருபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.05.2022 அன்று வியாழக்கிழமை பி.ப 4.00 மணிக்கு மட்டக்களப்பு, நாவற்குடாவில் உள்ள அன்னாரின் உறவினர் வீட்டில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
077 773 3325

முகவரி :
இல.29, ஸ்ரீ சிவானந்த வீதி,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு – 13.

310, பழைய கல்முனை வீதி,
நாவற்குடா,
மட்டக்களப்பு.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro