சாவகச்சேரி – மானிப்பாய்
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கனகசபை அவர்கள் 07.05.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாக்கியம் மற்றும் சரஸ்வதி, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைமகள், காலஞ்சென்ற வசந்தா, வசந்தறூபன், சகிதா, செல்வறூபன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற ஆனந்தகுமார், யாழினி, பிரதீபன், ஜான்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரங்கன், சாம்பவி, அஜித்குமார், அபிராமி, அபிர்ணா, சபீனா, வைஷ்ணவி, பவின், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் திப்பித்திடலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
வசந்தறூபன் (மகன்) – 00447712712096