திரு. சின்னத்துரை வரதராஜா

மலர்வு

12.07.1931

உதிர்வு

25.07.2022

(ஓய்வுபெற்ற இலங்கை மத்திய வங்கி ஊழியர்)

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், கல்வயல் சாவகச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வரதராஜா அவர்கள் 25.07.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

காலஞ்சென்ற முருகேசபிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, பொன்னுத்துரை மற்றும் விஜயரட்ணம், காலஞ்சென்ற மனோன்மணி, தவலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார், பாலகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜானி, கௌந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவிராம் அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாம்பிகை, ஜெயரட்டினம், தையல்நாயகி, காலஞ்சென்ற தம்பு, ராஜரட்னம், குணரட்னம், பரமானந்தம், காலஞ்சென்ற அரியமலர், சிவனேசன் ஆகியோரின் மைத்துனரும்,

ஈசன், உமா, ரதி, வாசன், அப்பன், சுபாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பெரியதம்பி, ஜெயா, ராசாத்தி, தருமன், சிஸ்ரீ, ரவி, பவா, மஞ்சுளா, கெங்கன், சியாமளா, பாஸ்கரன், பிரிந்தா, உசாந்தி, தவானி, விந்தியா, தர்சிகா, கயுரிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,

லதா, கண்ணன், ஜெயந்தி, விஜயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
பாலகுமார் (மகன்)

தொடர்புகளுக்கு :
ஜெயக்குமார் (மகன்) – 0033751862733, 0033142052602
பாலகுமார் (மகன்) – 00447931291679, 00442087077807
கேதீஸ்வரன் (அப்பன், பெறாமகன்) – 0094777249463

Share This Post

Select your currency
EUR Euro