கந்தர்மடம் – யாழ்ப்பாணம்
சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலக்கம் -16, அம்மன் வீதி, கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னம்மா அவர்கள் 01-11-2022 இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கனகசபை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவநாதர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற விசுவநாதர் இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், இசைவாணி, நம்பியாரூரன், திருவாரூரன் அவர்களின் அன்புத் தாயாருமாவார். காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவக்கொழுந்து, கந்தையா, செல்லையா ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, விசாலாட்சி, மார்க்கண்டு, சின்னாரிப்பிள்ளை, கனகம்மா ஆகியோரின் மைத்துணியும் ஆவார். காலஞ்சென்ற சண்முகதாஸ் மற்றும் இராஜரஞ்சினி, சித்திரா ஆகியோரின் மாமியாரும், சுகர்திகா, சிவதீபன், செந்தூரன், மயூரன், விகர்ணன், சஞ்சயன், விதுசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், அனபாயன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 01-11-2022 காலை 10.00 மணிக்கு இலக்கம் -180, பிரதான வீதி, வைற் ஹவுஸ் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன்பின்னர் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 04.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இ.திருவாரூரன் (மகன்) வட்ஸ்அப் 14375330492
இ.நம்பியாரூரன் (மகன்) வட்ஸ்அப் 4168751680
பேர்த்தி னுசு சி.சுகர்திகா வட்ஸ்அப் 447951304510