திரு.சுப்பிரமணியம் கணேசலிங்கம்

மலர்வு

25.02.1959

உதிர்வு

02.03.2023

யாழ்.நெடுந்தீவு-வவுனியா

யாழ்.நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும் வவுனியா பெரியதம்பனையை
தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கணேசலிங்கம் கடந்த 02.03.2023வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-பொன்னம்மா
தம்பதியினரின் செல்வப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் விஜயாம்பிகையின் பாசமிகு கணவரும் அகிலன்(கனடா), தயாளன்,மாறன்(கனடா),சாம்பவி(அமெரிக்கா),அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

தனுஸா (கனடா),ஜெமிலா, கீர்த்தனா(கனடா),வரதன்(அமெரிக்கா)ஆகியோரின்
அன்பு மாமனாரும்,சபாநாயகி,தியாகலிங்கம்(நோர்வே), புண்ணியலிங்கம்,கலாநாயகி,

குலநாயகி,செந்தில்நாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் அமிர்தாம்பிகை,
மோகனதாஸ்(கனடா),காலஞ்சென்ற கோசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
காவியா,அக்சயா,சாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.03.2023 வியாழக்கிழமை முற்பகல் 10.30
மணியளவில் இல.43,பெரியதம்பனை, வவுனியா என்ற முகவரியில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மதியம் 1.30 மணிக்கு பெரியதம்பனைகற்குழி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro