திருமதி இராசம்மா கிருஷ்ணபிள்ளை

மலர்வு

24.06.1941

உதிர்வு

15.06.2023

யாழ்-ஜேர்மனி

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்..

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யாழ். கொட்டடியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்மணிதேவி(இலங்கை), கிருஷ்ணானந்தன்(நோர்வே), கிருஷ்ணகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவராஜா, பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, பரமலிங்கம், அருளானந்தம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிதரன்(இலங்கை), மகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வல்லிபுரம், அன்னலட்சுமி, கலாமணி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற மனோகரன், சரோஜினி(சறோ-நோர்வே), இரஞ்சிதரஜினி(சூட்டி-ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயகுமார்(ஜேர்மனி), சூரியகுமார், ராஜ்குமார், அனுசியா, ஆஷா, ரதிகலா, பிரதீப் ராஜ்(Holland), அனுஷா, சபிதா, நிரோஷன், வைஷ்ணவன், சதீஷ்குமார்(நோர்வே), றக்சனா, லக்சனா, அபிசாந், மிதுர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பத்தாவும்,

சஞ்சனா, சச்சின், சஞ்ஜேய், கிஷாணி, டிவேர்ஷா, லிக்சா, சஷ்வினி(Holland), சஷ்வின், ஹயான், மித்ரன், ஷாரணிக்கா, ஷாயான்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro